Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அதிமுகவின் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ராஜேந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆலந்தூர் நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், காஞ்சி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் குழுவின் பொருளாளருமான எம். மணிமாறன் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
அவரோடு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் சிகரம் மீடியா பிரைவேட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகருமான என், சிவக்குமார், வழக்கறிஞர்கள் மோகனா, சத்யா, மணிகண்டன், பஞ்சமூர்த்தி, பாத்திமா, கெளதம், முரளி, சேகுவாரா, சிவக்குமார் உள்பட ராஜகோபால், பாலசுப்ரமணி, சரவணன் மற்றும் தணிகைமணி ஆகியோரும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.